Skip to content
Home » புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள்  நேற்று  சாலைமறியலில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் கலீல் ரஹ்மானை  தனிநபர் ஒருவர் தாக்கமுயன்ற சம்பவத்தில் திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,  அந்த தனி நபருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் கூறி  வழக்கறிஞர்கள் சாலை மறியல் செய்தனர்.

டவுன்டி.எஸ்.பி.ராகவி சம்பவ இடத்திற்கு வந்து வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று காலைக்குள்  சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதியளித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்கள்  போராட்டத்தை கைவிட்டுகலைந்து சென்றனர்.

இந்தநிலையில் இன்றும் சம்பந்தப்பட்ட நபரை  கைது செய்யாததைக்கண்டித்து  வழக்கறிஞர்கள் இன்று கொளுத்தும் வெயிலில் மாவட்ட போலீஸ் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதில் சுமார் 50 பேர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!