Skip to content
Home » புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. மாநில சட்டம்மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று வழிபட்டார்.திருமயத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க  சத்தியமூர்த்தி பெருமாள்  திருக்கோயில் உள்ளது. இது ஒரு குடைவறைக்கோயிலாகும். 108 வைணவ திருத்தலங்களில்  இக்கோயில் ஸ்ரீரங் கத்திற்கு அடுத்த படியாக சிறப்பிடம் பெற்றுள்ளது.  இங்கு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாள்  அனந்த சயன அலங்காரத்தில்

பக்தர்களுக்கு அருள்  பாலிக்கிறார். இது ஆசியாவிலேயே பெரிய பெருமாள் கோயிலாகும்  இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்  வைகுண்ட ஏகாதசி விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆழ்வார் ஏழு பிறப்புக்கள் பெற்று இறுதியில் இறைவனை  சென்றடைவதை உணர்த்தும் வகையில்  இந்த விழா கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!