Skip to content
Home » மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள  கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மகன்  ராம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு  புறப்பட்டு கொண்டிருந்த ராம்குமார் வீட்டின் கொல்லைபுறத்திற்கு சென்றான். அப்போது  மின்சார கம்பி அறுந்து  ராம்குமார் மீது விழுந்தது. இதில் ராம்குமார் இறந்தான். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!