புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (20.06.2023) வழங்கினார். உடன் வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி,
அட்மா கமிட்டி தலைவர் இளங்குமரன், வட்டாட்சியர் சதீஸ்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.