தமிழர்களின் திருநாளான பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப்பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில்நடைபெற்றது.
காவல்கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவபொங்கல்விழாவை தொடங்கி வைத்தார்.பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டிகளையும் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ் களையும் வழங்கினார். நிகழ்ச்சியில்புதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பா
ளர் ராகவி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர். விழாவில் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.