Skip to content
Home » ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கியும்,  ராகுலின் எம்.பி. பதவியை பறித்தும் அதிரடியாக உத்தரவிட்டது.

இதைத் எதிர்த்து ராகுல் குஜராத் ஐகோர்ட்டில்  அப்பீல் செய்தார். அப்பீல் மனுவை  நீதிபி ஹேமந்த்  பிரச்சக் விசாரித்து  வந்தார். இந்த வழக்கில் இன்று  நீதிபதி , ராகுல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராகுலின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிபதி மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!