Skip to content
Home » 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் குறிப்பாக  செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!