Skip to content
Home » தமிழகத்தை கலக்கிய கொள்ளையர்கள்…. 2 பேரை ராஜஸ்தானில் கைது செய்த திருச்சி போலீஸ்…

தமிழகத்தை கலக்கிய கொள்ளையர்கள்…. 2 பேரை ராஜஸ்தானில் கைது செய்த திருச்சி போலீஸ்…

  • by Senthil

திருச்சி மாநகர் எல்லைக்குட்பட்ட உறையூர் மற்றும் கண்ட்டோன்மென்ட் ஆகிய இடங்களில் பல்வேறு வீடுகளில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு திருடர்கள் சுமார் 300 சவரனுக்கும் அதிகமாக நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது – இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்தனர்.

இரண்டு திருடர்களும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ளதை அறிந்த திருச்சி மாநகர் தனிப்படை காவல்துறையினர்  ராஜஸ்தான் சென்று ரத்தன்,சங்கர் உள்ளிட்ட இரண்டு பிரபல கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இவர்கள் மீது திருச்சி கன்டோன்மென்ட், உறையூர் மட்டும் அல்லாது மதுரை மாநகர் காவல் நிலையங்களில் பல்வேறு இடங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் திருச்சி மாநகர காவல் துறை உதவி ஆய்வாளர் உமா தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!