தமிழ்நாடு அரசின் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ், அதிமுக ஆட்சியில் இவர் இந்த பொறுப்பில் இருந்தார். 2021ல் முதல்வராக இருந்த எடப்பாடி பாதுகாப்புக்காக புதுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்க ராஜேஸ்தாஸ் பாதுகாப்பு பணிக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் எஸ்.பியை தனது காரில் ஏற்றி ஆலோசனை என்ற பெயரில் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.
இது குறித்து டிஜிபியாக இருந்த திரிபாதியிடம் புகார் செய்ய அந்த பெண் எஸ்.பி. காரில் சென்றபோது செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் , பெண்எஸ்பியின் காரை வழிமறித்து புகார் செய்ய செல்ல விடாமல் தடுத்தார். எனவே டிஜிபி மற்றும் கண்ணன் எஸ்.பி.
மீது , பெண் எஸ்பி புகார் கொடுத்தார். அதன் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து வலிசாரணை நடத்தினர். இந்த வழக்கு விழுப்புரம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்று நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அதில் ராஜேஸ்தாஸ் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10, 500 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார். செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ500 அபராதமும் விதிக்கப்பட்டது.
பாலியல் வழக்கில் தண்டனை பெறும் முதல் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஸ்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.