ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களvது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்டனர். மேலும், தங்களது நண்பர்களும், உறவினர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் அரியலூர் நகராட்சி ஆணையர் என். மகேஷ்வரி தலைமையில்
நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும், பள்ளிவாசல் முன்பு எனது வாக்கு எனது உரிமை, அனைவரும் வாக்களிப்போம் செல்பி பாயிண்ட் அமைத்து அங்கு தொழுகை முடித்து வந்தவர்கள் அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஊக்குவித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.