Skip to content
Home » ராமநாதபுரத்தில்…….5 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு …… ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை

ராமநாதபுரத்தில்…….5 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு …… ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை

  • by Senthil

தமிழ்நாட்டில் 3 முறை முதல்வராகவும், ஒருமுறை துணை முதல்வராகவும் இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம், பின்னர் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதுடன், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. அதிமுக வேட்டியும் கட்டக்கூடாது என  உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இழந்ததை மீட்கலாம் என கருதினார்.

பாஜகவுடன் தேர்தல் கூட்டணியும் அமைத்தார். ஆனால் பாஜக அவரை தாமரை சின்னத்தில் நிற்கும்படி கட்டாயப்படுத்தியது. அதில் இருந்து விடுபட்டு சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.  கடைசியாக அவருக்கு பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

அங்கு சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இவருடைய நேரம் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் நேற்று மேலும் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இன்று  மேலும் 3 ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தனர். இதனால் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்துள்ளனர். 5 சுயேச்சைகளின் பெயர்களும் வரிசையாக  வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்கள். யார், எந்த ஓபிஎஸ் என தெரியாமல்  சுயேச்சை சின்னம் என்பதால் குழப்பத்தில் வாக்காளர்கள் திணறப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!