Skip to content
Home » நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Senthil

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ராஜேந்திரன் அந்த சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் கதறி அழுத சிறுமி வீட்டுக்கு ஓடி சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகபட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!