Skip to content
Home » காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்,ரேஷன் கடை பெண் பணியாளரிடம் தவறாக நடந்து கொண்ட கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் கூறிய

அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன், தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்கவே விடுமுறை நாள் பார்த்து தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதனை பயன்படுத்தி ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினார் மேலும் பயோமெட்ரிக் சிஸ்டம் வந்த பிறகு ரேஷன் கடைகளில் அதிகாரிகள் நடத்தும் ஆய்வு என்பது அர்த்தமற்றது என்றும் காசு பறிக்கவே நியாய விலை கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கு. பாலசுப்பிரமணியன் பகிரங்க குற்றம் சாட்டினார். டாஸ்மாக்கில் அதிகாரிகள் கொள்ளையடித்து வருவதாகவும், அங்கும் அதிகாரிகளின் லஞ்ச விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அரசு பணியாளர் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!