Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65). இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி.
இவரது இரண்டாவது மகனின் நண்பர் ஒருவர் மூலமாக சென்னை தியாகராய நகர் முருகேசன் தெரு பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தன்னை அறிமுகம் செய்தார். மேலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார் இதை நம்பிய ஆரோக்கியசாமி ,
ஓய்வு பணப்பலன் ரூ.60 லட்சம் மற்றும் சேமிப்பு பணம் என ரூ.1கோடி பணத்தை
பல்வேறு தவணைகளாக 2022- 23 காலகட்டங்களில் பார்த்திபன் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவருக்கு எந்த லாபத் தொகையும் கிடைக்கவில்லை அதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார் அதற்கு பார்த்திபன் இன்று வரும் நாளை வரும் என கடந்த 4மூன்று ஆண்டுகளாக இழுத்து அடித்தார் அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆரோக்கியசாமி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் வழக்கு விசாரித்த நீதிபதி மோசடி செய்த பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் சாருக்கு உத்தரவிட்டார் அதைத் தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் புகார் கூறப்பட்ட பார்த்திபன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

error: Content is protected !!