Skip to content
Home » திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

  • by Senthil

திருச்சி அடுத்த பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி காலை முதல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  காலையில் முதல் சுற்று போட்டி நடந்தபோதே காளை முட்டியதில் ஒரு எஸ்.ஐ. காயமடைந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல்  துவாக்குடி போக்குவரத்து ஆர் ஐ ரத்தினம்(55) ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெறும் மைதானம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது  மைதானத்தில் இருந்து ஓடிவந்த ஒரு காளை எஸ்.ஐ. ரத்தினம் வயிற்றில் முட்டி தள்ளியது. இதில் அவர் ரத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு  வயிற்றில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!