Skip to content
Home » சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை. அதேபோன்று இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி. வனத்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில்

வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யானை நடமாடும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் யானை கூட்டம் சாலையோரம் முகாமில் இருந்த நிலையில் குட்டி யானைகள் இரண்டு சாலையின் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!