Skip to content
Home » திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த மே 19ம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக
இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட அனைவரையும் திருவெறும்பூர்  போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது   எஸ். ஐ வினோத்தை  தாக்கிவிட்டு  தப்பி ஓட முயன்றார்  கொம்பன். இதனால்  போலீசார்  ஜெகனை என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அவர் சுருண்டு விழுந்து செத்தார். ரவுடி கொம்பன் என்கிற ஜெகன் மீது கொலை உள்பட 11 குற்ற  வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!