Skip to content
Home » ரூ.1 கோடி பணம் பறிமுதல்…….எட்டரை பஞ். தலைவி திவ்யா மீது வழக்குப்பதிவு

ரூ.1 கோடி பணம் பறிமுதல்…….எட்டரை பஞ். தலைவி திவ்யா மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல்கட்டமாக நடைபெற உள்ளது இந்த நிலையில் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது..

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை , மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு  நேற்று  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பேரில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர். அங்கு எட்டரை பஞ்சாயத்து தலைவர்  திவ்யா வீட்டில்   பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து  பறக்கும்படி அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று சோதனை போட்டனர்.

அங்கு   பைகளில்,  கட்டு கட்டாக  ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனை‌ அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார்  வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகளும் அங்கு சென்று பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தனது கணவர் தான் இந்த பணத்தை கொண்டு வந்து வைத்து விட்டு போனதாக கூறினாராம். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  அது தேர்தலுக்காக மக்களுக்கு கொடுக்க  பதுக்கி வைக்கப்பட்ட பணம் என  தெரியவந்தது.

எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் கணவர் அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான  பரஞ்சோதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே அதிமுக சார்பில் மக்களுக்கு கொடுக்க  கொண்டு வரப்பட்ட பணம் என்பது  தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர்  திவ்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!