Skip to content
Home » சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்….. வைரலாகும் போட்டோஸ்….

சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்….. வைரலாகும் போட்டோஸ்….

  • by Senthil

இந்திய ரசிகர்கள் மிகவும் ரசனை கொண்டவர்கள் என்பதை நமக்கு அவ்வப்போது  நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் பழக்கத்தை முதலில் துவங்கி வைத்தது நம்ம ஆட்கள் தான். அந்த வகையில் குஷ்பூ, நிதி அகர்வால் ஆகியோரை அடுத்து தற்போது சமந்தாவுக்கும் புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் தீவிர ரசிகர் சமந்தாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இந்த கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற இருக்கிறதாம். மயோசிடிஸ் நோயால் சமந்தா

பாதிக்கப்பட்ட போது, ​​அவர் குணமடைய வேண்டி திருப்பதி, சென்னை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். இது குறித்து அவர் கூறும் போது “சமந்தா பிரதிக்ஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு அதிகமானது. இதனால் அவருக்கு கோவில் கட்ட நான் தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் உள்ள ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். அதன் இறுதி கட்டப்பணியில் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!