திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி காரில் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெறுவளை வாய்க்கால் பாலம் மீது சென்றபோது கார் கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
காரில் பயணித்த, 6வயது சிறுவன், இரண்டு ஆண்கள் , 2 பெண்கள் உட்பட 5 பேரில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேரும் திருச்சி மஹாத்மா காந்தி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலம் மீது மோதியதாக தகவல் வௌியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு நடந்த சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.