Skip to content
Home » கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

  • by Senthil

ஆடி மாத கடைசி வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் – உற்சவர் மாரியம்மணுக்கு திருமஞ்சனம், பால், தயிர் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகம் – தீ சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தும் / தங்களது நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும், பால்குடம் எடுத்தும் உண்டில்களில் காணிக்கை செலுத்தியும் செல்வார்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும் ஆடியின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

சமயபுரம் உற்சவர் மாரியம்மனுக்கு திருமஞ்னம், பால், தயிர். மஞ்சள், பன்னீர், இளநீர், பழங்கள் உள்ளிட்ட 11 அபிஷேகம் உற்சவர் அம்மனுக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் தீ சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், வேப்பிலை ஆடை அணிந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள்

இயக்கப்படுகின்றன.

அதேபோன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறை சார்பிலும், கோவில் ஊழியர்களும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், அன்பில் மாரியம்மன் கோவில், திருவெறும்பூர் பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையான இன்று அம்மனை தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!