Skip to content
Home » இந்தியாவில்…..ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது

இந்தியாவில்…..ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது

அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்துள்ளது. அதில், ஓரின சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல. கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாகக் கருத முடியும் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது என்று மத்திய குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!