Skip to content
Home » கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி

கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15. இந்த தினத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.  தற்போது தமிழகத்தில் சனாதனம் குறித்து  பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இது குறித்து  15ம் தேதி திருவாரூர் மாவட்ட திமுக சார்பில்  சனாதனம் குறித்து மாணவிகள்  தங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளும் ஒரு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.

இது குறித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி முதல்வர் ராஜாராமன் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் , இக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்த நாளான செப். 15 அன்று மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில்  பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!