Skip to content
Home » தலைவர் பதவியில் நீடிக்க சரத்பவார் சம்மதம்…..

தலைவர் பதவியில் நீடிக்க சரத்பவார் சம்மதம்…..

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்ப பெற்றுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி குழு தனது ராஜினாமாவை ஏற்க மறுத்தால் முடிவை திரும்ப பெறுவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!