Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார். கைது நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைதுக்கான முகாந்திரங்களை தெரிவிக்கவில்லை’ எனக்கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்த போது மேகலா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜூன் 13-ந் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில் நள்ளிரவு 1.39 மணிக்குத்தான் எனது கணவர் செந்தில் பாலாஜியை கைது செய்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இடைப்பட்ட 3 மணி நேரத்தில் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியவில்லை. தனது அரசியல் பயணத்துக்கு எனது கணவர் பெரும் இடையூறாக இருப்பார் என்ற அடிப்படையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எனது கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பேசி வருகிறார். கைது செய்யப்பட்ட என் கணவரை, நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு முறையாக பரிசீலிக்கவில்லை. மாறாக அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சட்ட விரோதமானது என அறிவித்து எனது கணவரை விடுவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் இன்று நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!