Skip to content
Home » பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

கேரள மாநிலம், பட்டணம்திட்டா அடூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை இறந்துவிட்டார், தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அவரது வறுமையை பயன்படுத்தி, மாணவரை காதலித்துவந்த காதலன், கடந்த டிசம்பர் மாதம் முதல் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இது குறித்து அடூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குழந்தைகள் நலக் குழுவின் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட மாணவி  போலீசில் புகார் அளித்துள்ளார் என்ற விவரம் தெரிந்தவுடன் பத்தனம்திட்டா நூர நாட்டை சேர்ந்த அனூப் (22), அபிஜித் (20), அரவிந்த் (28), சக்தி மற்றும் ஜெயன் (42) ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இன்ஸ்பெக்டர் எஸ். ஸ்ரீகுமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு கேரள மாநிலம் ஆலப்புழாவில் பதுங்கியிருந்த இரண்டு பேரையும், பத்தனம்திட்டாவில் பதுங்கி இருந்த இரண்டு பேரும் சேர்ந்து மொத்தம் நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பகீர் உண்மைகள் வெளிவந்துள்ளது.

பள்ளி மாணவியை காதலன்தான் முதலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மாணவியின் தொலைபேசி எண்ணை காதலன் நண்பர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களும் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. காதலன் சுமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து, போக்சோ மற்றும் கூட்டு பலாத்கார பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை வேறு யாராவது துன்புறுத்தி உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!