Skip to content
Home » அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்…

அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்…

சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வெள்ள பாதிப்பு முற்றிலுமாக சீர்செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் இயங்க தொடங்கின.இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் என ஜன. 6, ஜன. 20, பிப். 3, பிப். 17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!