ஆடி இரண்டாம் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம்
ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு

அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பலர் பால்குடம், மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபட்டனர்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. இந்த நாளில் மாரியம்மனை தரிசித்து வழிபட்டால் குடும்ப நலன்,

ஆரோக்கியம், வளம் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஆடி வெள்ளி தோறும் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமானதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம் குடிநீர், தரிசன வரிசை, மருத்துவ உதவி உள்ளிட்ட சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து

ஒழுங்கை உறுதி செய்ய போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசம் நிறைந்திருந்தது.
