Skip to content
Home » பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான  பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரிஜ்பூஷண் சரன்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ்பூஷணிடம் டில்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரன்சிங் கைது செய்யப்படவில்லை.   அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!