முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்குமாறு கோரி இருந்தார். ஆனால் அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.