Skip to content
Home » செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

  • by Senthil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில் கரூர்

மாநகராட்சி 15வது வார்டு திமுக கவுன்சிலர் தியாகராஜன், வார்டு பிரதிநிதி கண்ணுசாமி ஆகியோர் செந்தில்பாலாஜி விரைவில் விடுதலையாகி கரூர் மாவட்டத்தில் மக்கள் பணியாற்றிட வரவேண்டும் என வேண்டி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா  பேராலயத்தில்  மொட்டை அடித்து வழிபாடு நடத்தினர். அந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!