காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும், அவரது சக நண்பர்களும் பொன்னம்பலத்தை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண்
வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பவுள்ளனர்.
இந்நிலையில், பொன்னம்பலத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.