Skip to content
Home » ம.பி. நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

ம.பி. நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத்தகராறின் காரணமாக மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சித் தோமர், ராதே தோமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இடையே நீண்ட காலமாக  நிலத்தகராறு  இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ரஞ்சித் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராதே தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கொன்றனர். பின்னர் கிராமத்தை விட்டு வெளியேறினார்.  இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சித் தோமரின் குடும்பத்தினர் கிராமத்திற்கு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் ராதே தோமரின் குடும்பத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!