திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா 2016ல் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டவருமான சிம்லா முத்துச்சோழன் திமுகவில் இருந்து விலகினார். அவர் நேற்று அதிமுக பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சிம்லா முத்துசோழன் தனக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு சீட் கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்தார். பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தது திமுக தலைமைக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது-