Skip to content
Home » பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மேலும் தொடர்  சிகிச்சையில் இருந்து வந்த தனலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த தனலட்சுமியின் கணவர் தேவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!