Skip to content
Home » பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

  • by Senthil

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலி,  அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து காட்டிற்குள் விடும் சேவையைச் சிறப்பான முறையில் ஆற்றிவந்தவர்.

jawahirullah

இந்த சேவையை அறிந்த தீயணைப்புத் துறையினர் எங்காவது பாம்பு உள்ளதாகத் தெரிந்தால் அவர்கள், தன்னார்வலர் உமர் அலியை தொடர்புகொண்டு உதவி கேட்பது வழக்கம், அதேபோன்று நேற்று பண்ருட்டியில் பாம்பு இருப்பதாகத் தீயணைப்புத் துறையிடமிருந்து தகவல் வரவே தன்னார்வலர் உமர் அலி அங்கு விரைந்து சென்று பாம்பைப் பிடித்து அதனைக் காட்டிற்குள் விட முயன்ற போது பாம்பு அவரை கடித்திடவே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உமர் அலி தன்னுடைய இன்னுயிரை நீத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!