Skip to content
Home » சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…

சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…

அரியலூர் மாவட்டம் ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவர் தனது வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்து, கடந்த மாதம் அறுவடை செய்துள்ளார். இன்று தனது வயலில் இருந்த சோளத்தட்டைகளை செங்கமலம்
தீயிட்டு கொளுத்தி உள்ளார். அப்போது அருகில் இருந்த வைக்கோல் போரில் தீ பரவாமல் தடுக்க முயன்ற போது, தடுமாறி சோள வயலில், செங்கமலம்
கீழே விழுந்ததில் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். செங்கமலத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, செங்கமலம் உயிரிழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வெங்கனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த செங்கமலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!