போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சட்டப்பேரவையில் (இன்று செப்.8) அறிவித்துள்ளார். பள்ளி வேலை நேரங்களுக்கு ஏற்ப இயக்கப்படவுள்ள இந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் சுமார் 140 பள்ளிகளை சேர்ந்த 19,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
