Skip to content
Home » ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

  • by Senthil

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது .இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் மண்டலம் – 1க்குட்பட்ட 4 -வது வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4900 வீடுகளுக்கு மண்டல குழு தலைவர் ஆண்டாள் ராம்குமார், திருவரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் ஏற்பாட்டில் இரு வண்ண குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சியில் இன்று நடந்தது .மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்தியநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இரு வண்ண குப்பைத் தொட்டிகளை வழங்கினர். இந்நிகழ்வில் மண்டலக்குழு தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!