Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது.

உண்டியல் காணிக்கைகள் கணக்கிடும் பணியில் கோயில் மேலாளர் தமிழ்செல்வி , கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , சரண்யா , மீனாட்சி ,வெங்கடேசன் , வேல்முருகன் ஆய்வாளர்கள் மங்கையர்ச்செல்வி, பாஸ்கர் , இராமசந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.

பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது ரூபாய் 79,96,950 , தங்கம் 72 கிராம் , வெள்ளி 1250 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 222 கிடைக்கப்பெற்றுள்ளது என கோவில் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!