Skip to content
Home » ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

நாளை ஸ்ரீரங்கம் சித்திரை தேரில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிந்து காட்சி அளிப்பார்*

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீரங்கம்

நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

அதன்படி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமிக்கும், உற்சவர் நம்பருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் கிளி மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் தலைமையில் பட்டாச்சாரியார்கள், நிர்வாகிகள் எடுத்து வந்து, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரியப்பன் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்களிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் பழங்கள் மற்றும் பூக்கள் யாவும் கருட மண்டபத்தில் இருந்து திருக்கோயில் பிரகாரங்களில் மேளதாளத்துடன் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து வலம்வந்து பின்னர் மூலஸ்தானம் கொண்டுசெல்லப்பட்டது.

நாளை நடைபெறும் சித்திரை திருத்தேரோட்டத்தின்போது இந்த வஸ்திரங்களை கொண்டு நம்பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் பெரிய பெருமாளை தரிசித்து வருகின்றனர்…

சித்திரை தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!