Skip to content
Home » பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி 2ம் நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:

பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மும்பை கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமைந்து  பிரதமர் எங்கு சென்றாலும் இந்தியா கூட்டணி பற்றி தான் பேசுகிறார்.  இந்தியா கூட்டணி உடையும் என்ற பிரதமரின் கனவு தகர்ந்து போய்விட்டது.  அரசியல் எதிரிகளை அச்சுறுத்த சிபிஐ,  ஐடி, ஈடி ஆகியவற்றை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை.  நாட்டை காப்பாற்றவே இவ்வளவு பேரும் இங்கு சேர்ந்து உள்ளோம். எங்கள் அரசியல் லாபத்திற்கு அல்ல. எங்கு சென்றாலும் எங்களைப்பற்றி பேசி இந்தியா கூட்டணியின் விளம்பரதாரராக மாறிய பிரதமர் மோடிக்கு நன்றி.

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.28 கட்சிகளை ஒன்று சேர்த்து இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி என நிரூபித்து விட்டோம். வரும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து  அனைத்து கட்சி தலைவர்களும் பேசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!