திருச்சி, காஜாமலை பகுதியில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் திடீரென இன்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்து இதுகுறித்து
நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சமாதானமாகி கல்லூரி மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.