Skip to content
Home » பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

  • by Senthil

பாகிஸ்தானி்ல் பெரும்பாலான கட்டுமான பணிகள் சீன நிறுவனத்திடம் தான் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கைபர் பக்துன்வா என்ற இடத்தில் ஒரு அணை கட்டுமான பணி நடந்தது. இந்த பணி்யில் ஈடுபட்டிருந்த சீன பொறியாளர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 5 சீன பொறியாளர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதனால் சீன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!