நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். எனவே அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். எனவே நாளை காலை அன்சூர் அலிகான் விசாணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரியவரும்.