Skip to content
Home » குஜராத் ….. சூரத் காங். வேட்பாளர் மனு நிராகரிப்பு

குஜராத் ….. சூரத் காங். வேட்பாளர் மனு நிராகரிப்பு

  • by Senthil

குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்பு மனு தாக்கல் செய்தார். பரிசீலனையின்போது நிலேஷ் கும்பானியின் பெயரை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டவர்கள் வேட்புமனுவில் உள்ள கையொப்பம் தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். அதே போல் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் மனுவை முன்மொழிந்தவர்களும் அது தங்களின் கையெழுத்து இல்லை என கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினார். இதில், நிலேஷ் கும்பானி, மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலா ஆகியோரிடம் விளக்கங்களை கேட்டார். அவர்கள் பதிலளிப்பதற்கு நேற்று காலை அவகாசம் கொடுத்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ். மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி நேற்று தெரிவித்தார். இதனால், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பாஜகவினர் தோல்வி பயத்தில்   முன்மொழிந்தவர்களை மிரட்டியும்,  அவர்களை கடத்திச்சென்றும் தங்கள் கஸ்டடியில் வைத்து உள்ளனர். இதனால் தான் இந்த நி்லை ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு இப்போதே தோல்வி பயம் ஏற்பட்டு விட்டதை இது காட்டுகிறது என  மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!