தஞ்சை பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்காக திமுக சார்பில் தஞ்சை கலைஞர் அறிவாலயம் எதிரே 2,000 சதுர அடியில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா பிரமாண்டமாக கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ், எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது அந்த தேர்தல் அலுவலகம் திடீரென காலி செய்யப்பட்டு விட்டது. இது குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு இந்த தேர்தல் பணிமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். இது, திமுக வேட்பாளர் ச.முரசொலியின் தேர்தல் செலவுக் கணக்கில் சேரும் என்பதால் தேர்தல் பணிமனை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.