Skip to content
Home » 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது. இது  இன்னும் சற்று நேரத்தில்  தீவிர புயலாக மாற உள்ளது. இந்த நிலையில்  கடந்த 2 தினங்களாக   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை கொட்டி  தீர்க்கிறது.  தற்போது சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் புயல்  நிலை கொண்டு உள்ளது.  இதன் காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களிலும்  பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் 4 மாவட்டங்களிலும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு  நேற்று வெளியிடப்பட்டதும் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இன்றைய குளிரை சமாளிக்க நேற்றே சரக்குகளை வாங்கிச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!