Skip to content
Home » ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Senthil

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58)

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம் என்பவரிடம்,, ரவி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார்  கோயில் அருகே மறைந்திருந்தனர்.  சிங்காரம் , கோயில் ஊழியர் ரவியிடம் லஞ்சம் கொடுத்தபோது போலீசார்  ரவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!