Skip to content
Home » கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் வழங்கினார்.

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.4,000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1,500ல் இருந்து ரூ.2,000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!